[வ.சுரேஸ் கண்ணா ]
கிழக்கு மாகாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க யாத்திரை ஸ்தலமான
ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை ஆலய வருடாந்த பாத
யாத்திரையும்,பெருவிழாவும் இனிதே நிறைவடைந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை 24 .08 .2012 அன்று கொடியேற்றத்துடன்
ஆரம்பமான வருடாந்த திருவிழா இன்று காலை 02 .09 .2012
வணக்கத்துக்குரிய ஆயர் பேரருட் தந்தை கிங்சிலி சுவாம்பிள்ளை
ஆண்டகை தலைமையில் நடைபெற்ற கூட்டுத்திருப்பலியை
தொடர்ந்து அன்னையின் திருச்சுரூப ஆசீரைத் தொடந்து கொடி
இறக்கத்துடன் பெருவிழா நிறைவடைந்தது.
பல்லாயிரக்கணக்கான தமிழ் சிங்கள கத்தோலிக்க யாத்திரிகரும் ,
வெவ்வேறு பங்குகளை சார்ந்த இறைமக்களும் பெருவிழா
வழிபாடுகளில் கலந்துகொண்டார்கள்.
வணக்கத்துக்குரிய ஆயர் பேரருட் தந்தை கிங்சிலி சுவாம்பிள்ளை
அவர்களுக்கு வாழ்த்துப்பா வாசிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
திருத்தல இணையத்தளமும் இன்று முதல் வலைத்தளங்களில்
பார்வையிட முடியும் என பங்குதந்தை அருட்பணி டக்ளஸ் ஜேம்ஸ்
அவர்கள் குறிப்பிட்டார்[.www .motherhelp .org ]
சனிக்கிழமை காலை புளியந்தீவு தூய மரியாள் பேராலயத்தில் இருந்து
ஆரம்பமான பாதயாத்திரையில் சுமார் 3000 இற்கும் மேற்ப்பட்ட
யாத்திரிகள் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment