Thursday, September 27, 2012

புதிய மட்டு ஆயர் கலாநிதி ஜோசெப் பொன்னையா பங்குபற்றிய முதல் மறைக்கல்வி நிகழ்வு!.



[வ.சுரேஸ் கண்ணா ]
புதிய மட்டக்களப்பு மறை மாவட்ட முதல் ஆயராக 23 .09 .2012  
அன்று பணிகளை பொறுப்பேற்ற ஆயர் அதி வந்தனைக்குரிய கலாநிதி ஜோசெப் பொன்னையா ஆண்டகை(23.09.2012 )மாலை 6 மணிக்கு தூய மரியாள் பேராலய முன்றலில்  நடைபெற்ற 
மறைக்கல்வி மாணவர்களின் கலை நிகழ்வுகளில் பிரதம 
அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அங்கு உரையாற்றிய ஆயர் தான் ஆயராக பொறுப்பேற்று 
மறைக்கல்வி மாணவர்களின் கலை நிகழ்வில் முதலாவதாக கலந்து கொள்வதையிட்டு தான் பெரு மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.

கிழக்குப்பல்கலைக்கழக நடன விரிவுரையாளர் திருமதி சர்மிளா ரஞ்சித்குமார் அவர்கள்  ஆயரினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நாளை நினைவு கூருமுகமாக 
புளியந்தீவு தூய மரியாள் பேராலய மறை ஆசிரியர்கள் 
மறைக்கல்வி மாணவர்களின் இக்கலை நிகழ்வுகளை 
ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பங்கு தந்தையர்களுடன் அதிகளவிலான பங்கு மக்கள் 
கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.










No comments:

Post a Comment