Friday, August 31, 2012

மறைப்பாடசாலை மாணவ செல்வங்களுக்கு எமது மனமார்ந்த நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்.


[வ.சுரேஸ் கண்ணா ]

வாழ்த்துகின்றோம்!
இவ்வாண்டு 2012  மறைக்கோட்ட ரீதியில் நடைபெற்ற 
விவிலிய வினா விடைப்போட்டிகளிலும் ,கட்டுரை
பேச்சு போட்டிகளிலும் முதலாம்,இரண்டாம் ,மூன்றாம் 
இடங்களைப்பெற்று எமது புளியந்தீவு பேராலய பங்கு 
சமூகத்திற்கு பெருமைசேர்த்த மறைப்பாடசாலை 
மாணவ செல்வங்களுக்கு எமது மனமார்ந்த நன்றியுடன் 
கூடிய வாழ்த்துக்கள்.

பங்கு பற்றிய அனைத்து மாணவர்களுக்கும் எமது 
நன்றிகள்.
மாணவர்களை பயிற்ருவித்த மறை ஆசிரியர்களுக்கும் 
ஊக்கமளித்த பங்கு தந்தையர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் 
எமது மனமார்ந்த நன்றிகள்.

கட்டுரைப்போட்டி;16 வயது -1  ஆம்    இடம்
செல்வி உ.ஷாருமதி, 2 ஆம் இடம் -செல்வி உ.மேரி ஷன்மதி
பேச்சு 12 வயது- 2 ஆம் இடம் - உ.ஷைனுஜா
விவிலிய வினாவிடை-20 வயது பிரிவு - 2 ஆம் இடம் 
சி .ரம்யா ,ஜெ  .துலாஞ்சலி, பி.சுரன்யா ,பி.பிரவின்  
  
விவிலிய வினாவிடை-12 வயது பிரிவு - 3 ஆம் இடம் 
ச.கீர்த்திகன் ,ஆன் டினுஷியா ,ஆன் கீர்த்தனா ,பெ.பவனிஜா,இ,இவானா .
    

Saturday, August 4, 2012

மட்/புளியந்தீவு தூய மரியாள் பேராலய வருடாந்த பெருவிழா -2012

[V.Suresh Kanna] 
Add caption
மட் /புளியந்தீவு தூய மரியாள் இணைப் பேராலயம் 
ஜூலை மாதம் 03 ஆம் திகதி கத்தோலிக்க திருச்சபையின் 
தலைவர் 16 ஆம் ஆசீர்வாதப்பரினால் பேராலயமாக பிரகடனப்

படுத்தப்பட்டதை தொடர்ந்து முதல் வ
ருகின்ற ஆவணித்திருநாள்
இம்முறை பேராலயத்தின் முதல் பிறப்பின் பெருவிழாவாகவும்
இருப்பதனால் வெகு சிறப்பாக இப்பெரு விழாவை சிறப்பிக்க
பேராலய பங்குதிருச்சபை ஆலய புணரமைப்பு முதல் ஆன்மீக
ரீதியாகவும் பல்வேறு வழிகளில் பலவிதமான ஆக்கபூர்வமான
முயற்ச்சிகளில் ஈடுபட்டு வருவது நீங்கள் அறிந்ததே!
பழமை குன்றாத ஒரு புதிய பேராலயத்தை நாம் இப்போது
காணக்கூடியதாக இருக்கின்றது.
எம்மோடு தோளோடு தோள் கொடுத்த எமது பங்கு மக்களையும்
எமது பேராலய வளர்ச்சிப்பாதையை விரும்பும் உள் நாட்டு
வெளிநாட்டு நல் உள்ளங்களையும் நாம் நன்றியோடு இந்த வேளை
நினைத்துப் பார்க்கின்றோம்.
இன்னும் உங்களின் ஆதரவுக்கரத்தினை நாம் நன்றியுடன்
எதிர்பார்த்திருக்கின்றோம்.
விஷேட விதமாக எமது புதிய மட்டக்களப்பு மறை மாவட்டத்திற்கும்
எமது முதல் ஆயர் ,எமது மட்டு மண்ணின் மைந்தர் பேரருட்திரு
ஜோசெப் பொன்னையா ஆண்டகைக்கும் நாம் எமது வாழ்த்துக்களை
இந்த மகிழ்ச்சி தரும் நாட்களில் தெருவிப்பதோடு ,ஆயருடன்
ஒன்றிணைந்து எமது மறை மாவட்டத்தின் வளர்ச்சிப்பாதைக்கு
கைகொடுப்போம்.
கொடியேற்றம் 06 .08 .2012 திங்கட்கிழமை
பெருவிழா 15 .08 .2012 .௦௦ புதன்கிழமை காலை 07 .15 மணி
பேராலய பெருவிழாவில் அனைவரும் ஒன்றிணைவோம்
விண்ணேர்ப்பு அன்னையின் ஆசீர் பெற்றிடுவோம்..௦௦


Donation can be sent to
the National Saving Bank Batticaloa Branch, Parish Pastoral Council A/C No: 1-0021-0348562, St. Mary’s Co-Cathedral Puliyanthivu – Batticaloa.
For Further information: Tel No: 065 2222226, Parish Priest, Rev.Fr. J.S. Moraes
FB: stmaryscathedralbatti. 
E-mail: maryscathedral1808@gmail.com
Website: www.stmaryscathedralbatti.org

Friday, August 3, 2012

குருக்களின் பாதுகாவலர் தூய ஜோன் மரிய வியானி நினைவுப் பெருவிழா!

August 04 .
குருக்களின் பாதுகாவலர் 
தூய ஜோன் மரிய வியானி நினைவுப் பெருவிழா!  
எமது மறைமாவட்ட குருக்களுக்காகவும் 
உலகெங்கும் கிறிஸ்துவின் அன்புப் பணியை அர்ப்பணத்துடன் 
ஆற்றி வரும் அனைத்து குருக்களுக்காகவும் இந்நன்னாளில் 
திருப்பலியில் இணைந்து கொண்டு விசேட விதமாக ஜெபிப்போம். 
பேராலய உடனடி திருத்த வேலைகள்
தூய மரியாள் பேராலய உடனடி திருத்த வேலைகள் 
தற்போது மிகவும் வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
பங்கு மக்கள் ,நலன் விரும்பிகள் ,அன்னையின் பக்தர்கள் 
மற்றும் உலகெங்கும் பரந்து வாழும் எமது பங்கு சகோதர 
சகோதரிகள் எம்முடன் தொடர்பு கொண்டு அன்புடனும்,
எமது ஆலயம் என்ற உளப் பாங்குடனும் நீங்கள் காட்டி வரும் 
உங்களின் ஆலோசனைகள் மற்றும் ,உடல் உள,பண,பொருள்
ரீதியான உங்களின் உதவிகள் எம்மை பழமை குன்றாத 
ஒரு புதிய பேராலயத்தை கட்டியெழுப்ப உற்ச்சாகத்தை
தந்திருக்கின்றது .அன்னையின் பரிந்துரை செபத்தோடு 
இறை ஆசீர் என்றும் உங்களோடு இருப்பதாக.
தொடர்ந்தும் உங்களின் அன்பும் ,பண்பும் நிறைந்த ஆதரவுக்கரத்தை 
நாம் எதிர்பார்த்திருக்கின்றோம்.
என்றும் நன்றியுடன் நாம்!
பங்கு தந்தையர்கள்,பங்கு மேய்ப்புப் பணிச்சபை 
மரியாள் பேராலய பங்கு சமூகம். ,
எமது இணையத்தள முகவரியுடன் இன்று முதல் நாம் உங்களுடன்!
fb:StMarys Cathedralbatti
E-mail: maryscathedral1808@gmail.com
Website: www.stmaryscathedralbatti.org