புதிய மட்டு மறைமாவட்ட மேய்ப்புப் பணிச்சபையின்
முதலாவது மகாநாடு -2012 .முதல் ஆயர் தலைமையில் !
[வ.சுரேஸ் கண்ணா ]
புதிய மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் மேய்ப்புப் பணிச்சபையின்
முதலாவது மகாநாடு -2012 ,அதன் முதல் ஆயர் பேரருட் தந்தை
கலாநிதி ஜோசெப் பொன்னையா ஆண்டகை தலைமையில்
மட்/மன்ரேசா தியான இல்லத்தில் கார்த்திகை 16 ஆம் 17 ஆம் திகதிகளில்
வெகு சிறப்பாக நடைபெற்றது.
புதிய மறை மாவட்டத்தின் கொடி ஏற்றுதல் வைபவத்தை தொடாந்து
மறை மாவட்ட கீதம் இசைக்கப்பட்டு ,மங்கள விளக்கேற்றுதலை
அடுத்து செப வழிபாட்டுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது!
"நம்பிக்கையை அறிந்து ,வாழ்ந்து வழங்க "(நம்பிக்கையின் ஆண்டு
2012 /2013 )என்னும் கருப்பொருளை அடிப்படையாய்க் கொண்டு
தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த அருட்பணியாளர் D .F .அல்போன்ஸ்
அடிகளார் (இயக்குனர் TNBCLC) சிறப்புரை வழங்கினார்.
மறைக்கலவி ஆண்டு- 2012 நிறைவடைந்து நம்பிக்கையின் ஆண்டு- 2013
ஆரம்பமாவதை தொடர்ந்து வருடாந்த பொது அமர்வில் எதிர்வரும் 5
ஆண்டுகளுக்கான மறைமாவட்ட திட்டமிடல் ,மற்றும் நிருவாக
உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.மறைமாவட்ட இணையத்தளமும்
திறந்துவைக்கப்பட்டது.
அருட்பணியாளர்கள் ,துறவறத்தோர் ,பொதுநிலையினர் என
பலரும் இம்மகாநாட்டில் கலந்து கொண்டனர்.நிறைவில்
மறைமாவட்ட மேய்ப்புப் பணிச்சபையின் புதிய நிருவாக
செயலர் செல்வி A .விமலினி அவர்களின் நன்றி உரையுடன்
நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றது.இம்மகா நாட்டினை
பொது நிலையினர் ஆணைக்குழு இயக்குனர் அருட்பணி
S .டக்ளஸ் ஜேம்ஸ் அடிகளார் மிகவும் சிறப்பான முறையில்
ஒருங்கிணைத் திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.