Friday, August 3, 2012

குருக்களின் பாதுகாவலர் தூய ஜோன் மரிய வியானி நினைவுப் பெருவிழா!

August 04 .
குருக்களின் பாதுகாவலர் 
தூய ஜோன் மரிய வியானி நினைவுப் பெருவிழா!  
எமது மறைமாவட்ட குருக்களுக்காகவும் 
உலகெங்கும் கிறிஸ்துவின் அன்புப் பணியை அர்ப்பணத்துடன் 
ஆற்றி வரும் அனைத்து குருக்களுக்காகவும் இந்நன்னாளில் 
திருப்பலியில் இணைந்து கொண்டு விசேட விதமாக ஜெபிப்போம். 
பேராலய உடனடி திருத்த வேலைகள்
தூய மரியாள் பேராலய உடனடி திருத்த வேலைகள் 
தற்போது மிகவும் வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
பங்கு மக்கள் ,நலன் விரும்பிகள் ,அன்னையின் பக்தர்கள் 
மற்றும் உலகெங்கும் பரந்து வாழும் எமது பங்கு சகோதர 
சகோதரிகள் எம்முடன் தொடர்பு கொண்டு அன்புடனும்,
எமது ஆலயம் என்ற உளப் பாங்குடனும் நீங்கள் காட்டி வரும் 
உங்களின் ஆலோசனைகள் மற்றும் ,உடல் உள,பண,பொருள்
ரீதியான உங்களின் உதவிகள் எம்மை பழமை குன்றாத 
ஒரு புதிய பேராலயத்தை கட்டியெழுப்ப உற்ச்சாகத்தை
தந்திருக்கின்றது .அன்னையின் பரிந்துரை செபத்தோடு 
இறை ஆசீர் என்றும் உங்களோடு இருப்பதாக.
தொடர்ந்தும் உங்களின் அன்பும் ,பண்பும் நிறைந்த ஆதரவுக்கரத்தை 
நாம் எதிர்பார்த்திருக்கின்றோம்.
என்றும் நன்றியுடன் நாம்!
பங்கு தந்தையர்கள்,பங்கு மேய்ப்புப் பணிச்சபை 
மரியாள் பேராலய பங்கு சமூகம். ,
எமது இணையத்தள முகவரியுடன் இன்று முதல் நாம் உங்களுடன்!
fb:StMarys Cathedralbatti
E-mail: maryscathedral1808@gmail.com
Website: www.stmaryscathedralbatti.org

No comments:

Post a Comment