[வ.சுரேஸ் கண்ணா]
மட்டக்களப்பு தூய மரியாள் பேராலய ஞாயிறு மறைப்பாடசாலை
மறை ஆசிரியர்கள் ,மாணவர்களின் ஒளி விழாவும் வருடாந்த
பரிசளிப்பு நிகழ்வும் 16.12.2012 ஞாயிறு மாலை 03 மணிக்கு
மட் /சாள்ஸ் மண்டபத்தில் பங்கு தந்தை J .S .மொறாயஸ்
அடிகளாரின் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது.
பிரதம அதிதியாக மட்டு மறைமாவட்ட ஆயர் பெருந்தகை
பேரருட் கலாநிதி ஜோசெப் பொன்னையா ஆண்டகை அவர்களும்
சிறப்பு விருந்தினராக மட் /கல்முனை உயர் நீதி மன்ற நீதிபதி
கெளரவ .B .சசி மகேந்திரன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
அத்துடன் பேராலய உதவி பங்கு தந்தை S .X .ரவிகாந்த் CMF ,
அருட் சகோதரிகள் ,அருட்சகோதரர் ,பெற்றோர் நலன் விரும்பிகள்
மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பங்கு தந்தை J .S .மொறாயஸ் அடிகள் வரவேற்ப்புரை வழங்கினார்.
மறை ஆசிரியர் ஒன்றிய தலைவர் திரு வ .சுரேஸ் கண்ணா அவர்கள்
இவ்வாண்டுக்கான மறைப்பாடசாலையின் ஆண்டறிக்கையினை வாசித்தார்.
அத்துடன் மறை ஆசிரியர் ஒன்றிய தலைவர் ஆயருக்கு நினைவு சின்னத்தை
வழங்கி வைத்தார்.
மறைக்கல்வி ஆண்டை முன்னிட்டு மறைப்பாட சாலைக்கென
மறை ஆசிரியை செல்வி T .டிலேக்ட்ரா அவர்களின் முயற்சியில்
உருவான இணையத்தளத்தையும் (www.stmarysundayschool .com )
ஆயர் அவர்கள் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இவ்விணைய தளம் ஊடாக இலங்கையின்முதல்தமிழ்
கத்தோலிக்இணையத்தளமான தமிழ் கத்தோலிக்க
செய்தி லங்கா இணையத்தளம் பார்வையிட
இணைக்கப்பட்டுள்ளது.
பரீட்சை மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும்
பரிசில்களும் வெற்றிக்கோப்பைகளும் ,பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
மறை ஆசிரியர்களுக்கான பரிசில்களை பங்கு தந்தையர்கள் வழங்கி
வைத்தார்கள்.
பாலன் பிறப்பை மையமாகக்கொண்டசிறார்களின் அனைத்து நிகழ்வுகளும்
அனைவரினதும் பாராட்டுகளையும் பெற்றுக்கொண்டது.
இறுதியில் நத்தார் தாத்தா வருகைதந்து எல்லோரையும் மகிழ்வித்தார்.
Catechist's Association Puliyantivu shared StMarys Cathedralbatti's album: ST.MARY'S SUNDAY SCHOOL OLI VIZHA 2012.
ReplyDeleteமட்டு தூய மரியாள் பேராலய மறைப்பாடசாலை மாணவர்களின்
ஒளி விழாவும் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் -2012