Sunday, November 11, 2012

மட்/புளியந்தீவு தூய மரியாள் பேராலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினரின் 13ஆவது ஆண்டு நினைவு நன்றித்திருப்பலி.



[வ.அன்டனி சுரேஸ் கண்ணா ]
மட்/புளியந்தீவு தூய மரியாள் பேராலய கத்தோலிக்க இளைஞர்
ஒன்றியத்தினரின் 13 ஆவது ஆண்டு நினைவு நன்றித்திருப்பலியும்
வருடாந்த அர்ப்பண புதுப்பித்தலையும் ஞாயிறு காலை (11 .11 .2012)
07 .30 மணி திருப்பலியில் இணைந்து சிறப்பித்தனர்.

பங்கு தந்தை J .S .மொறாயஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்ற 
இச்சிறப்பு திருப்பலியில் கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய உறவுகளுடன் 
பங்குமக்களும் இணைந்து ஒன்றிய வளர்ச்சிக்காக நன்றிகூறி செபித்தார்கள்.

திருப்பலி நிறைவில் 13 ஆவது ஆண்டு நினைவு கேக் வெட்டப்பட்டு 
தங்களது மகிழ்ச்சியை பங்கு மக்களுடன் ,மற்றும் பங்கு தந்தை,ஒன்றிய 
உறவுகளுடனும் பகிர்ந்துகொண்டார்கள்.

அத்துடன் இவ்வளவு காலமும் (CATHOLIC YOUTH ASSOCIATION - CYA )
என அழைக்கப்பட்டு வந்த இவ்வொன்றியம் இன்று 11 .11 .2012 முதல்
 (CATHOLIC YOUTH FEDARATION - CYF )என அழைக்கப்படும் எனவும் 
ஒன்றிய தலைவர் செல்வன் A .கிருரஜன் அவர்கள் ஒன்றிய இயக்குனரின்
உத்தியோக பூர்வ அறிவித்தலை அறிவித்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
















 

No comments:

Post a Comment